
கடந்த சனிக்கிழமை உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. இந்த போட்டியில் போராடி வெற்றி பெற்றது இந்தியா.
ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, ஆட்டத்தின் 29வது ஓவரில் எல்.பி.டபிள்யூ கேட்டு ஆக்ரோஷமான முறையில் அம்பயர் அலிம் தாரிடம் முறையிட்டார் இந்தியா அணியின் கேப்டன் விராத் கோலி.
அம்பயரிடம் ஆக்ரோஷமாக முறையிட்டதால் விராத் கோலிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவித்துள்ளது. ஐசிசியின் விதிகளில் 2.1 யை மீறியதால் கோலி மீது லெவல் 1 குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் கீழ் கோலியின் போட்டி தொகையில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அம்பயர்கள் அலிம் தார், ரிச்சர்ட் இலிங்வாத், மூன்றாவது அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்போராக் மற்றும் மைக்கெல் கோக் ஆகியோர் கோலி, ஐசிசி விதிகளை மீறியதாக புகார் அளித்தனர்.
‘கோலி குற்றச்சாட்டை ஒப்புகொண்டுள்ளார். மேட்ச் ரெப்ரி கிறிஸ் பிராட் முன்வைத்த அபராதங்களை கோலி ஏற்று கொண்டார்' என ஐசிசி அறிக்கை வெளியிட்டது.
கோலிக்கு ஒரு குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா எதிராக ஜனவரி 15,2018 நடந்த போட்டியிலும் கோலிக்கு ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக கோலிக்கு தற்போது இரண்டு குறைபாடு புள்ளிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.