
23-21, 21-7 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார் © AFP
பேட்மிண்டன் தொடரான இந்தோனேசிய ஓபனில் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளனர்.
காலிறுதியின் முந்தைய சுற்றில் கிரிகோரியாவை 23-21, 21-7 என்ற செட்களில் சிந்து வென்றார்.
முதல் செட்டை கடுமையாக போராடி வென்ற சிந்து, இரண்டாவது செட்டை எளிதாக வென்றார்.
ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த், கென்டா நிஷிமொண்டோவை 21-14, 21-9 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இரண்டாவது போட்டியில் முன்னணி வீரரான மலேசியாவின் சொங் வியாங்கை வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்று நடக்க இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் – பிட்ரானி மோத உள்ளனர்.
இன்று நடக்கும் போட்டியில் சாய்னா வென்றால், காலிறுதியில் தாய்லாந்தின் பார்ன்பாவை எதிர்கொள்வார்.